About Me

My photo
'Sank' in 'er(r's)'.. I stand for Stupidity, Sorrow, Smartness, Sexy, Seriousness, and what not.. Sankar = Error (Wow it is poetic! Ya it does rhyme) And That is me....:)

Saturday, November 21, 2009

நீயில்லா நாட்கள் (Days without you)


முகத்திலே மலரை கண்டேன்
மதிலிலே காம்பை கண்டேன்
இடை இல்லை தேடி நின்றேன்- இளங்குயிலே

முகில் வந்து போனபின்னே
நிலம் எல்லாம் காய்ந்தபின்னே
தனிமையில் நானிருந்தேன்- கவிக்குயிலே

உன்னை இன்று பிரியும்முன்னே
மனதிலே வெறுமை கொண்டேன்
கனவின்றி அமைதியுற்றேன்- பொன்மணியே

காதல் செய்த பாவம் என்ன
மோதல் வந்து போனதென்ன
நீயுமென்ன நானுமென்ன விளங்கலையே

உனக்கென காத்திருப்பேன்
தனிமையை நான் ரசிப்பேன்
கவிகொண்டு அதை துதிப்பேன்- கண்மணியே

வந்து உந்தன் கரம் தருவாய்
விழி கொண்டு உயிர்தருவாய் நீ
எனைவந்து சேரும் நாட்கள் தெரிகிறதே..

Thursday, November 19, 2009

கழுத்து (Neck)


சிறுவர்கள் விளையாடும்
சறுக்குமரமாம்
தங்கச்சங்கிலிக்கு.

பொருத்தம்... (Match...)

இரவின் மடியில் விழுந்த
நிலவும் நட்சத்திரமுமாய் - உன்
கூந்தல், முகம், மூக்குத்தி.

கொலுசொலி (Sound of Anklet)

பாத இதழால்
பாறையின் கன்னத்தில்
முத்தச்சத்தம்.

வெற்றியும் தோல்வியும் (Success and Failure)

வெற்றியும் தோல்வியும்
வாழ்க்கை சக்கரத்தின் கம்பிகள்
மேலும், கீழுமாய் வட்டமடிக்கும்.

அவை காலத்தின்
பெண்டுலங்கள்
முன்னும் பின்னுமாய் ஊசலாடும்.

அவை புகழின் மாயைகள்
கண்முன்னே
தோன்றி பின் மறையும்.

அவை உயிரின் மூலதனம்
நம்மோடு வாழ்ந்து
மண்ணோடு முடியும்.

அவை நண்பன், பகைவன்
முறையே நம்முள்
தோற்றுவிக்கும்.

அவை அன்பும், விரோதமும்
ஒன்றிற்கொன்று
வளர்த்துக்கொள்ளும்

அவைதான்
வாழ்வையும், சாவையும்
உறுதி செய்யும்.

எனவே தோல்வியை
மனதில் கொள்ளாமல், நினைவில்கொள்
வெற்றி காண்பாய்.

வெற்றியை
நினைவில் கொள்ளாமல், மனதில்கொள்
தோல்வி தவிர்ப்பாய்.


வாழ்வில் வளம் பெற்றிட
வெற்றி தோல்வியை
உன் வசப்படுத்திடு

உயிர் வளர்த்திடு
வெறுமை மறந்திடு - பின்
உலகை துறந்திடு

தொலைபேசி கவிதை.. (Telephone poem)

அவள்
குயில் போல்
பேசிய
பாடலுக்கு,

அவன்
ம்ம்.. ம்ம்..
என்று இசை
அமைத்தான்..

இதயம் (Heart)

எதையும்
தாங்கும் இதயம்,
இதுவரை என்னை
தாங்கியதில்லை

இருந்தும்
தாங்குகிறேன்
உன்சுமையை,

என்றாவது
என்னை நீ
தாங்குவாய் என்று.

தாய் (Mother)

அவள்
துயர்களைய
பல கணங்கள்
தவறவிட்டேன்.

என்
உணர்வறிந்தவள்
உணர்வற்று கிடப்பதை
உணர்ந்து
வருந்தும் வேளையில்,

என் துயர்
களைய
ஓடோடி
வந்தவள்.

கடிதம் (Letter)

மூ வோர்வார்த்தைக்கு ஏங்குகிறது நெஞ்சம்,

கூற மருத்துவிடுவாயோ என்று மனம் அஞ்சும்,

மலை, காடு, மரங்கள் யாவையும் கெஞ்சும்,

சிறு மழலையின் குணம் எனக்குள் தஞ்சம்,

வார்த்தைக்கு ஏனடி கஞ்சம்,

ஒரு பார்வைக்கோ உன்னிடம் பஞ்சம்,

இதழால் நீ கொடுத்த நஞ்சும்,

பருக- மனம் விடுத்து உயிரை துஞ்சும்,

ஒருபோதும் வேண்டாம் மனதில் வஞ்சம்,

வா!! (இனிதே) இணைந்து காண்போம் மஞ்சம்.

பெண் (Woman)

சரஸ்வதிக்கு கல்வி இல்லை,

செல்விக்கு வறுமை தொல்லை,

பார்வதியின் உடல் கொள்ளை,

தாமரை பூமீது வீற்றிருப்பவர்கள்

தாமரையோடு வீற்றிருக்க

ஆண்களை படைக்கவோ

பெண்களை காத்தான் பிரம்மன்.

இறைவன் உண்டென்றால் இது- அவன் பிழை

இல்லை என்றாலும் இது அவன் பிழையே

என்னும் மானிடர்களிடையே

பெண் சிசுக்கள் மாயம்.

விடுதலை (Freedom)

ஐந்து புலனை
நானடக்கி
தாயின் மடியில்
தவமிருந்தேன்

தனியே நானிருந்தேன்
அனைத்தையும் துறந்திருந்தேன் -
எனினும்
உறவுகள் எல்லாம்
என்னக்கே சொந்தமாய் இருந்தது.

என் தவத்தின்
வலியால் ஏனோ- எம்மை
விடுதலை செய்தாள்

நானும் தனித்து நின்றேன்

இன்றோ புவியில்
யாரும் இல்லை- எனக்கு
சொந்தமாய்.