கூற மருத்துவிடுவாயோ என்று மனம் அஞ்சும்,
மலை, காடு, மரங்கள் யாவையும் கெஞ்சும்,
சிறு மழலையின் குணம் எனக்குள் தஞ்சம்,
வார்த்தைக்கு ஏனடி கஞ்சம்,
ஒரு பார்வைக்கோ உன்னிடம் பஞ்சம்,
இதழால் நீ கொடுத்த நஞ்சும்,
பருக- மனம் விடுத்து உயிரை துஞ்சும்,
ஒருபோதும் வேண்டாம் மனதில் வஞ்சம்,
வா!! (இனிதே) இணைந்து காண்போம் மஞ்சம்.
No comments:
Post a Comment